Saturday 14 January 2017

வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம்


1: ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர

1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

02:மூலிகை ஷாம்பு

செம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு கினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.

03:மரு, காலாணி குணமாக

கற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்.

04:கண் பார்வையை மேம்படுத்தி கண்நோய் வராது காக்கும் 'மூலிகைக் கண்மை'

வயல் ஓரங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசாலைச் சாற்றில் சுத்தமான சிறிய வெள்ளைத் துணியை நன்கு மூழ்கி காயவைக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த துணியை திரும்ப திரும்ப மூழ்கி குறைந்தது 8 அல்லது 10 முறை செய்ய வேண்டும். ஒரு சிறு நெய் விளக்கில் இத் துணியை எரித்து சாம்பலாக்க வேண்டும். இச்சாம்பலை எடுத்து போதிய அளவு சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்கு அரைத்து பசையாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும் தேவைக்கேற்ப, தேவையான அளவு எடுத்து முறைப்படி கண்களுக்கு மைதீட்ட கண் எரிச்சல், இமை வீக்கம், இமை முடி உதிரல் உள்ளிட்ட நோய்கள் தீருவதுடன் கண் பார்வை கூர்மைப்படும். இதை ஆண், பெண் இரு பாலாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

05:வெள்ளைபடுதல் நிற்க

1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.

2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.

06: உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள்

1. காலை மாலை நடைப் பயிற்சி

2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்

3. பகல் தூங்காதிருத்தல்

4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்

5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்

6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்

7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்

7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்

8. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்

9. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல்

10.பசி அதிகம் இருந்தால் அதைக் குறைக்கும் வகையில் திரிபலாச்சூரணம், மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதி சூரணம் போன்றவற்றை முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உண் ணல்.

07:இளைத்த உடல் பருமனாக

1. நேரம் தவறாமல் உணவு உண்ணல்

2. மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம்

3. இரவில் நீர்ச்சத்துள்ள உணவு உண்ணல்

4. உணவில் பூசணிக்காய், தடியங்காய் (வெண்பூசணி), வெண்ணெய் சேர்த்துக் கொள்ளல் 5. உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல். காய்கறி சூப், கஞ்சி வகைகளை உண்ணல், மலச்சிக்கல் இல்லாதிருத

No comments:

Post a Comment